Last Updated:
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தங்களது தோல்வி தவிர்க்க முடியாதது என்பதை உணரத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.
மேற்குவங்கத்தில் ஊடுருவல்காரர்களின் அரசாங்கத்தை அமைக்க மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தங்களது தோல்வி தவிர்க்க முடியாதது என்பதை உணரத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.
முன்னதாக பூர்வா பர்தமானில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் தன்னை காண திரண்டிருந்த தொண்டர்களுடன் பிரதமர் மோடி ரீல்ஸ் வெளியிட்டார்.
கேஷியாரியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி ஒரு மாபெரும் மோசடி என்று சாடினார். பாஜகவை எப்படியாவது ஆட்சிக்குக் கொண்டு வர மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து மேற்கொண்ட முயற்சி இது என்றும் விமர்சித்தார்.


