Last Updated:
பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இரு தலைவர்களும் இயல்பாக பேசிக் கொண்ட வீடியோ காட்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மகாத்மா ஜோதிபா பூலேவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும், ராகுல் காந்தியும் கலந்துரையாடியது கவனத்தை ஈர்த்துள்ளது.
சமூக சீர்திருத்தவாதிகளுள் ஒருவரான மகாத்மா ஜோதிபா புலேவின் 200 ஆவது பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi arrives at Prerna Sthal on the Parliament premises to pay a floral tribute to Mahatma Jyotiba Phule on his 200th birth anniversary today.
Lok Sabha Speaker Om Birla, Lok Sabha LoP Rahul Gandhi, Union Minister Arjun Ram Meghwal, former… pic.twitter.com/QexqUVky1Z
— ANI (@ANI) April 11, 2026
முன்னதாக நிகழ்விடத்திற்கு வந்த பிரதமர் மோடியை ராகுல் காந்தி உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது ராகுலுடன் பிரதமர் மோடி நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இரு தலைவர்களும் இயல்பாக பேசிக் கொண்ட வீடியோ காட்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Delhi,Delhi,Delhi
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் கலந்துரையாடல் : கவனம் பெறும் வீடியோ


