Last Updated:
அதிகாலை 5.30 மணி அளவில் சான் டியாகோவுக்கு அருகே உள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் திட்டமிட்டபடி, ஓரியான் விண்கலம் பாதுகாப்பாக சரியான நிலையில் விழுந்தது.
மனிதர்கள் இதுவரை பயணித்திராத நிலவின் தொலைவுப்பகுதியை எட்டிய ஆர்டெமிஸ்-2 குழுவினர், 10 நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 1972ம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்கள் அடங்கிய ஆர்டெமிஸ் 2 குழுவை, நிலவை நோக்கி கடந்த 1 ம் தேதி அனுப்பியது. இதுவரை மனிதர்கள் செல்லாத தூரத்தை எட்டிய 4 பேர் கொண்ட இக்குழுவினர், நிலவின் பின்பக்கம் சென்று கரடுமுரடான மேற்பரப்புகளை படம்பிடித்து விட்டு பூமிக்கு புறப்பட்டனர். விண்வெளி வீரர்கள் பயணித்த ஓரியான் விண்கலம், மணிக்கு 38 ஆயிரத்து 365 கிலோ மீட்டர் வேகத்தில் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது, நெருப்பு பந்து போல காட்சி அளித்தது.
இதனை தொடர்ந்து, இந்திய நேரப்படி, அதிகாலை 5.30 மணி அளவில் சான் டியாகோவுக்கு அருகே உள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் திட்டமிட்டபடி, ஓரியான் விண்கலம் பாதுகாப்பாக சரியான நிலையில் விழுந்தது.
உடனடியாக, படகு மூலம் 4 வீரர்களையும் நாசா குழுவினர் பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்தனர். பின்னர், ஹெலிகாப்டர் மூலம், அவர்கள் கரைக்கு அழைத்துவந்து பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்த சாதனையை படைத்த நாசாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், செவ்வாய் கிரகம் தான் அடுத்த இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.


