Last Updated:
நீர் வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருக்கும்போது அடுத்தடுத்து 3 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் அனந்தகிரி அருகே உள்ள முலகுமி நீர்வீழ்ச்சிக்கு ஜம்புவலசா கிராமத்தைச் சேர்ந்த திரிஷா, பவித்ரா உள்ளிட்ட 4 மாணவிகள் சுற்றுலா சென்றுள்ளனர். நீர்வீழ்ச்சியின் அருகே பாறை விளிம்பில் தேங்கியிருக்கும் தண்ணீரில் இறங்கி மாணவிகள் மூவர் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அதை பாறையின் மேல் நின்றுகொண்டிருந்த அஞ்சலி என்பவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். பாறையின் ஓரமாக நின்று குளித்துக்கொண்டிருந்தபோது மூவரில் ஒரு மாணவி, ரீல்ஸ் வீடியோவுக்கு போஸ் கொடுப்பதற்காகச் சற்று ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார்.
அப்போது நீரில் மூழ்கும் நிலை உண்டாகி, தத்தளித்து சிரமப்பட்ட அவரை கண்டு அடுத்தடுத்து இருவர், அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பாவம் மூன்று மாணவிகளும் நீரில் மூழ்கினர்.
இதனை செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டிருந்த சக தோழி அஞ்சலி அதிர்ச்சியில் போனை தூக்கிப் போட்டுவிட்டு, உதவிக்கு யாரையாவது அழைத்துவர ஓடியுள்ளார். அதில் உள்ளூர் மக்கள் நீரில் இறங்கி காப்பாற்றுவதற்குள், மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்து நீரில் மூழ்கிய மூவரின் சடலங்களையும் மீட்டனர். இதனால் மாணவிகளின் கிராம மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.


