
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தரவின்படி தனது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான சத்தியக்கடதாசியை காலக்கெடுவிற்குள் சமர்ப்பித்தார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான சத்தியக்கடதாசியை இன்று (10) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.
அவரிடம் சொத்து விபரங்களை 14 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்பே அறிவித்திருந்தது. அந்த கால அவகாசம் இன்று நிறைவடைந்த நிலையில், அவர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
இதுகுறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளதுடன், மஹிந்த ராஜபக்ஷ தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

