இது குறித்து எஸ்.பி.ஐ. வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஏப்ரல் 11, 2026 அன்று இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணி முதல் 2.50 மணி வரை இணைய வங்கிச் சேவை, யோனோ லைட் மற்றும் யோனோ ஆகியவற்றின் ஓடிபி அடிப்படையிலான சேவைகளில் இடையிடையே தடங்கல்கள் ஏற்படலாம். அந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் தடையற்ற சேவைகளுக்கு ஏ.டி.எம்., யு.பி.ஐ., செக்யூர் ஓ.டி.பி. மற்றும் எஸ்.பி.ஐ. ஆத்தெண்டிகேட்டர் ஆகியவற்றை பயன்படுத்தலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


