Last Updated:
அனந்த் அம்பானி 31வது பிறந்தநாள் ஜாம்நகரில் பிரம்மாண்ட விழா, பாலிவுட் நட்சத்திரங்கள் வருகை, முன் பழங்குடியினருடன் ராதிகா மார்சந்துடன் சேர்ந்து கொண்டாடினார்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் வந்தாரா மீட்பு மையத்தின் தலைவருமான அனந்த் அம்பானியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜாம்நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் அம்பானியின் பிறந்தநாள் இன்று. அவருக்கு 31 வயது ஆகிறது. ஒவ்வொரு வருடமும் அவர் ஏழை எளிய மக்களுக்கும், மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கும் உதவி செய்து வருகிறார். அதன்படி இன்றைய தினம் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது.
குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில் பாலிவுட் பிரபலங்கள், விவிஐபிக்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஷாருக் கான், ரன்வீர் சிங், அனன்யா பாண்டே, ஷனாயா கபூர் மற்றும் பல நட்சத்திரங்கள் மும்பையிலிருந்து குஜராத்தின் ஜாம்நகர் புறப்பட்டனர்.
மும்பை விமான நிலையத்தில் ஷாருக் கான் தனது மனைவி கௌரி, மகன் அப்ராம் மற்றும் தனது செல்ல நாயுடன் வந்தார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகின. அதேபோல் ரன்வீர் சிங்கும் ஸ்டைலிஷாலான தோற்றத்தில் மும்பை விமான நிலையம் வந்தார்.
முன்னதாக, அனந்த் அம்பானி தனது பிறந்தநாளை பழங்குடியினர் கூடத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிகழ்வில் அவரது மனைவி ராதிகா மார்சந்தும் அவருடன் இருந்தார். புதன்கிழமை மதியம் கர்ஜத் தாலுகா, வஞ்சர்பாடாவில் உள்ள ராதா மீரா அறக்கட்டளையில் தங்களது பிறந்தநாளைக் கொண்டாடினர். அப்பகுதியில் உள்ள ஆறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின சகோதரர்களுக்கு இனிப்புகள், மழைக் கோட்டுகள், குடைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டன.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
Anant Ambani Birthday | அனந்த் அம்பானியின் பிறந்தநாள்… ஜாம்நகரில் குவியும் நட்சத்திரங்கள் – யார் யார் வருகிறார்கள்?


