Last Updated:
நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களுக்கு மழைக் கோட்டுகள் குடைகள், போர்வைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் இயக்குநரும், விலங்குகள் நல அமைப்பான ‘வந்தாரா’வின் பொறுப்பாளருமான ஆனந்த் அம்பானி நாளை தனது 31 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, அவர் பழங்குடியின மக்களுடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடி அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வின் போது பழங்குடியின மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. இதனை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம், கர்ஜத் தாலுகாவில் உள்ள வஞ்சர்பாரா கிராமத்தில் அமைந்துள்ள ராதா மீரா அறக்கட்டளையில் நேற்று விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அனந்த் அம்பானியுடன் அவரது மனைவி ராதிகா மெர்ச்சண்ட் மற்றும் அறக்கட்டளையின் தலைவர் பரத் மெஹ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். அதிகாலை முதலே அறக்கட்டளையில் ஹவன், சிறப்பு பூஜைகள், பஜனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. அனந்த் அம்பானி அங்குள்ள 12 ஜோதிலிங்கக் கோயில்கள் மற்றும் அன்னை காளி, துர்கா, கணபதி ஆகிய தெய்வங்களை வழிபட்டு தனது நாளைத் தொடங்கினார். மேலும், இந்து தர்மத்தின்படி பசு மாட்டிற்கு பூஜைகள் செய்து தனது வழிபாட்டை நிறைவு செய்தார்.
வழிபாட்டிற்குப் பிறகு, அனந்த் அம்பானி வஞ்சர்பாராவைச் சுற்றியுள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களுடன் நேரத்தைச் செலவிட்டார். வரவிருக்கும் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்களுக்கு மழைக் கோட்டுகள் குடைகள், போர்வைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
இது அப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவையை உணர்ந்து செய்யப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான செயலாகப் பார்க்கப்படுகிறது.
கர்ஜத் மட்டுமின்றி, மும்பையின் காட்கோபர் பகுதியிலும் அனந்த் அம்பானியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரம்மாண்டமான சமூகப் பணி நடைபெற்றது. சுமார் 20 இடங்களில் உணவு மையங்கள் அமைக்கப்பட்டு, ஏறத்தாழ 12,000 முதல் 15,000 மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
Apr 09, 2026 10:53 AM IST
பழங்குடியின மக்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஆனந்த் அம்பானி.. நல உதவிகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்தார்…


