அப்படி மீறி வெளியிட்டால், 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126A பிரிவின் கீழ் தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தடைசெய்யப்பட்ட காலத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது அல்லது ஒளிபரப்புவது, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து தண்டனைக்குரிய குற்றமாகும்.


