செராஸில் நேற்று ஒரு பொழுதுபோக்கு மையத்தைச் சேதப்படுத்தியது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுக்கு எதிராக விளக்கமறியல் உத்தரவு கோரப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் பல வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக அவர் கூறினார். இந்த வழக்கு, தண்டனைச் சட்டத்தின் 427-வது பிரிவின் கீழ் சேதம் விளைவித்ததற்காகவும், 148-வது பிரிவின் கீழ் ஆயுதமேந்தி கலவரம் செய்ததற்காகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று, ஒரு கும்பல் லோரியைப் பயன்படுத்தி கடையின் வாயிலை வலுக்கட்டாயமாகத் திறந்து, பின்னர் வளாகத்திற்குள் புகுந்து பல பொருட்களைச் சேதப்படுத்தியதாக காவல்துறை தெரிவித்தது.




