இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான AI-277 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலில் ஈடுபடும் 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் இன்று (06) காலை 06:50 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட பாரியளவு குஷ் போதைப்பொருள்
இவரிடமிருந்து 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அவரது பயணப் பொதியிலிருந்த சொக்லேட் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ 340 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருளையே அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளுக்காக, குறித்த பயணி மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

