Last Updated:
நிலவுக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள், பூமியைப் பிரிந்து செல்லும் வேளையில் அதன் பிரகாசமான நீல அழகைப் படம்பிடித்துள்ளனர்.
ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் நிலவை நோக்கிப் புறப்பட்ட நாசா வீரர்கள், பூமியைப் பிரிந்து செல்லும் வேளையில் எடுத்த பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
நிலவின் மேல் பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆர்டெமிஸ்-2 என்ற விண்கலத்தை நாசா கடந்த 2-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்த விண்வெளி பயணத்தில் கனடா நாட்டின் விண்வெளி வீரர் உள்பட 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் ஒரு நாள் முழுவதும் பூமியைச் சுற்றி விட்டு நிலவை நோக்கி பயணித்து வருகின்றனர்.
நிலவில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படம்
இதனிடையே, நிலவுக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள், பூமியைப் பிரிந்து செல்லும் வேளையில் அதன் பிரகாசமான நீல அழகைப் படம்பிடித்துள்ளனர். இந்த விண்வெளி குழுவினர் நிலவின் மறுபக்கத்தை மிக நெருக்கமாகவும், நேரடியாகவும் காணும் முதல் மனிதர்கள் என்ற சாதனையைப் படைக்க உள்ளனர்.


