பிவித்துரு ஹெல உறுமய தலைவரும் சட்டத்ணியுமான உதய கம்மன்பில எழுதிய ‘ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியைக் கண்டறிதல்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள், தொலைபேசி மூலம் தங்கள் மீது சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் காரணமாக பாதியிலேயே நிகழ்விடத்தை விட்டு வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள சம்புத்தத்துவ ஜயந்தி மந்திர் என்னும் இடத்தில் நடைபெற்றது.
அருவருப்பான மற்றும் இழிவான செயல்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு யார் காரணம் என்று தேர்தல் மேடையில் மீண்டும் மீண்டும் கூறிய அதே கட்சியின் நிகழ்வில் கலந்துகொண்டு தங்களை வெள்ளையடிப்பது மிகவும் அருவருப்பான மற்றும் இழிவான செயல் என தொலைபேசி அழைப்புகளைச் செய்தவர்கள் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இதுபோன்ற தொலைபேசி அழைப்புகளைச் செய்த நபர்கள் குழுவில் பல கத்தோலிக்க அருட் தந்தையர்களும் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
அருட் தந்தையர்களும் களத்தில்
அதன்படி, அருட் தந்தையர்களும் எதிர்காலத்தில் இந்த விஷயத்தைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த நம்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உதய கம்மன்பிலவின் குறிப்பிட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர்களின் பங்கேற்பு குறித்து முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஏற்கனவே தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

