Last Updated:
சசிதரூர் மீதான தாக்குதல் முயற்சி திட்டமிட்ட சதிச் செயல் எனவும் காரில் இருந்த அவரை ஒரு கும்பல் தாக்க முயன்றதாகவும் காங்கிரஸ் வேட்பாளர் அனில் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேரளாவில் தேர்தல் பரப்புரைக்காக வந்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூரை ஒரு கும்பல் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளரும், மாநில செயல் தலைவருமான அனில் குமாரை ஆதரித்து மலப்புரம் அடுத்த வண்டூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் காரில் வந்தார். அப்போது அவரது காரை வழிமறித்து ஒரு கும்பல் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதில் சசிதரூரின் பாதுகாவலர் காயமடைந்தார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து அதில் மூவரை கைது செய்தனர். மேலும், சசிதரூர் மீதான தாக்குதல் முயற்சி திட்டமிட்ட சதிச் செயல் எனவும் காரில் இருந்த அவரை கண்டறிந்து கும்பல் தாக்க முயன்றதாகவும் காங்கிரஸ் வேட்பாளர் அனில் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.


