பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானுடனான அமெரிக்க – இஸ்ரேல் போர் காரணமாக இந்த முக்கிய போக்குவரத்துப் பாதை மூடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில், பிரான்சுக்குச் சொந்தமான ஒரு கப்பல் கடந்துள்ளது தற்போது பெரும் பேசுபொருளாகி உள்ளது.
மோதல் தொடங்கியதிலிருந்து இந்த நீர்வழிப்பாதையைக் கடந்து செல்லும் ஒரு பெரிய மேற்கு ஐரோப்பிய நிறுவனத்திற்குச் சொந்தமான முதல் கப்பல் இதுவே என கப்பல் போக்குவரத்து ஆய்வாளர்களான கெப்ளர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நீரிணையை ஈரான் முடக்கியது
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
மேலும், சர்வதேச எண்ணெய் விநியோகத்தின் முக்கிய வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியதுடன் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுக்குச் சொந்தமான கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதியில்லை எனவும், அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
கப்பல் போக்குவரதுக்கு முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கபப்ட்டதால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலக பொருளாதாரம் பாரிய அச்சுறுத்லுக்குள்ளானதுடன் உலக நாடுகள் பல எரிபொருள் பற்றாக்குறைக்கு முகம் கொடுத்து வருகின்றன
இந்த நிலையில், பிரெஞ்சு நிறுவனமான CMA CGM-க்குச் சொந்தமான, மால்டா கொடி ஏற்றப்பட்ட கொள்கலன் கப்பல் ஜலசந்தியைக் கடந்தது என, அந்நிறுவனத்திற்குச் சொந்தமான BFM TV ஊடக அமைப்பு வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

