Last Updated:
அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் ஈரானின் கராஜ் பாலம் இடிந்து விழுந்த காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுடன் நடந்த அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அந்நாடு மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானை கராஜூ நகருடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைப் பாலம் மீது அமெரிக்கா வான்வெளித் தாக்குதல் நடத்தியது. இதில், 8 பேர் கொல்லப்பட்டனர். 95 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சியை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் மிகப்பெரிய பாலத்தை தகர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் இதுபோல் மேலும் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவின் ராணுவ தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை (randy george) உடனடியாகப் பதவி விலகி ஓய்வு பெறுமாறு அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்ஸெத் (pete hegseth) உத்தரவிட்டுள்ளார்.
தரைமட்டமான ஈரான் பாலம்… “உடனே பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால்…” – கடுமையாக எச்சரித்த ட்ரம்ப்!

