Last Updated:
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி கேரளா என்.டி.ஏ வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய சென்னை வருகிறார் பிரதமர் மோடி, பாதுகாப்பு தீவிரம், பாஜக ஆலோசனையும் நடக்கிறது
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் பரப்புரை மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை 3.20 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.
புதுச்சேரி, கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்றும், நாளையும் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, இன்று மாலை 3.20 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். அங்கு, அஜந்தா சிக்னல் சந்திப்பு, அண்ணா சாலை மற்றும் அண்ணா திடல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ செல்லும் பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
இதில் சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ள நிலையில், சாலைகளில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் வருகையை ஒட்டி புதுச்சேரியில் ஆயிரத்து 500 காவலர்களும், மத்திய துணை ராணுவத்தின் 20 கம்பெனி படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் பரப்புரையை முடித்து விட்டு, சென்னை திரும்பும் பிரதமர் மோடி, இன்றிரவு கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry)


