Last Updated:
Industrial Diesel Prices Hike | இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில், தொழில்துறை டீசல் விலையில் இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், தொழில்துறை டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.28.22 உயர்த்தியுள்ளன. இது 25 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வாகும். இதன்மூலம் ஒரு லிட்டரின் புதிய விலை ரூ.137.81ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களால் இந்த விலை மாற்றம் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு நேரடியாக மொத்தமாக விற்கப்படும்போது, HSD எனப்படும் அதிவேக டீசலுக்கு இது பொருந்தும். மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல் மற்றும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் விளைவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் குறிப்பிட்டன. இதேபோல், ஃபர்னஸ் ஆயில் விலை ஒரு லிட்டருக்கு ரூ.23.77 உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில்துறை மற்றும் மொத்த பயனர்களுக்கான விநியோகம் தடையின்றி தொடரும் என்று நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளன. பொருட்கள் கிடைப்பதில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண வாகன ஓட்டிகள் மற்றும் டீசல் கார் உரிமையாளர்களுக்கான பெட்ரோல் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில், தொழில்துறை டீசல் விலையில் இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த மார்ச் 20-ஆம் தேதியன்று, இதே நிறுவனங்கள் டெல்லியில் மொத்த விலையை ஒரு லிட்டருக்கு ரூ.87.67-இல் இருந்து ரூ.109.59 ஆக உயர்த்தின. இது முந்தைய விலையில் இருந்து ரூ.22 அதிகம் ஆகும். அதே நேரத்தில், பிரீமியம் 95-ஆக்டேன் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. ஈரான் மோதல் தீவிரமடைந்ததால், நேற்று (வியாழக்கிழமை) சர்வதேச எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 108.40 அமெரிக்க டாலரை எட்டியது.
Apr 03, 2026 11:57 AM IST


