சமையல் எரிவாயு மற்றும் பிற எரிபொருள்களின் விலை உயர்ந்திருக்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்காக உறுதியாக நிற்கவில்லை. அவர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பணிந்துபோகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கொல்லத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி,
நரேந்திர மோடியின் தலைமையிலான நமது மத்திய அரசின் கொள்கை என்ன? அவர் தனது மக்களுக்காகப் போராடவில்லை. அவர் இந்தியாவுக்காகப் போராடவில்லை. அவர் இந்தியாவுக்காக உறுதியாக நிற்கவில்லை. அவர் செய்துகொண்டிருப்பது எல்லாம் அமெரிக்காவுக்கு பணிந்துபோவதும், இஸ்ரேலுக்கு பணிந்துபோவதும் மட்டுமே.
பிரதமர் மோடி சமரசத்துக்கு உள்ளாகிவிட்டார்; அதனால்தான் அவர் ட்ரம்ப்புக்கு பணிந்துபோகிறார். இதற்கெல்லாம் யார் விலை கொடுக்கிறார்கள்? நீங்கள்தான் விலை கொடுக்கிறீர்கள். விலை உயர்வை எதிர்த்துப் போராட வேண்டிய சூழலுக்கு நீங்கள்தான் விலை கொடுக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார். (a)

