செகாமட்: ஜோகூர் பாரு- சிரம்பான் சாலையின் KM212 பகுதியில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வியாழக்கிழமை (ஏப்ரல் 2) பிற்பகல் 3.45 மணிக்கு ஒரு வேன், ஒரு டிரெய்லர் மற்றும் 10 டன் லோரி சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவம் நடந்ததாக செகாமட் காவல் துறை கண்காணிப்பாளர் ஜுமாசான்சாஹிர் செக் இஸ்மாயில் தெரிவித்தார்.
70 வயது உள்ளூர்வாசி ஒருவர் நான்கு பயணிகளுடன் ஓட்டிச் சென்ற அந்த வேன், செகாமட்டிலிருந்து இங்குள்ள கெமாஸ் பாரு அருகே இருக்கும் தமன் கோல்டன் ஹில் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
வேன் சந்திப்புக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து வந்த டிரெய்லர் வேனின் பின் இடது பக்கத்தில் மோதியது என்று கண்காணிப்பாளர் ஜுமாஜன்சாஹிர் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இந்த மோதலின் விளைவாக, வேன் எதிர்ப்புறப் பாதைக்குச் சறுக்கிச் சென்று ஒரு லாரியால் மோதப்பட்டது என்றும் அவர் கூறினார்.
வேன் ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாக கண்காணிப்பாளர் ஜுமான்சான்சாஹிர் தெரிவித்தார். மேலும் இரண்டு பயணிகள் காயமடைந்து, இங்குள்ள அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறிய அவர், 20 வயதுகளில் உள்ள டிரெய்லர் ஓட்டுநரும், 30 வயதுகளில் உள்ள லோரி ஓட்டுநரும் காயமின்றி தப்பினர் என்றும் தெரிவித்தார்.
வேன் ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாக கண்காணிப்பாளர் ஜுமான்சான்சாஹிர் தெரிவித்தார். மேலும் இரண்டு பயணிகள் காயமடைந்து, இங்குள்ள அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறிய அவர், 20 வயதுகளில் உள்ள டிரெய்லர் ஓட்டுநரும், 30 வயதுகளில் உள்ள லாரி ஓட்டுநரும் காயமின்றி தப்பினர் என்றும் தெரிவித்தார்.





