தொடர்ச்சியான ஏவுகணை எச்சரிக்கை ஒலிகளும், பதுங்குகுழிகளில் நிலவும் அச்சமும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலியர்களுக்கு வழங்கிய விடுமுறைக்காலப் பரிசு என ஈரான் புரட்சிகர காவல்படையின் விண்வெளிப் படைத் தளபதி விமர்சித்துள்ளார்.
தனது எக்ஸ் கணக்கில் ஹீப்ரு மொழியில் எழுதிய ஒரு பதிவில், பிரிகேடியர் ஜெனரல் மஜித் மூசாவி இதனை தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவின் பரிசு
அதில் அவர், ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு உள்ளான பகுதிகளில் உள்ள குறுகிய, இருண்ட நிலத்தடிப் பதுங்குகுழிகளுக்குள் தொடர்ச்சியான எச்சரிக்கை ஒலிகளும் நடுக்கமும் நிலவும் காட்சிகளை அவர் விவரித்துள்ளார்.

Image Credit: Wikipedia
இத்தகைய நிலைமைகள், விடுமுறைக்காலத்தில் சியோனிஸ்டுகளுக்கு நெதன்யாகு வழங்கும் பரிசின் ஒரு பகுதியைப் பிரதிபலிக்கின்றன என்று கேலி செய்துள்ளார்.
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்கள்
கடந்த பெப்ரவரி 28 அன்று முதல் ஈரானுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

Image Credit: Le Monde
இந்தத் தாக்குதல்களில் ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி உட்பட பல மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்குப் பதிலடியாக, ஈரானிய ஆயுதப் படைகள், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலும் பிராந்தியத் தளங்களிலும் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிலைகளைக் குறிவைத்து, ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு பதிலடித் தாக்குதல்களை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

