Last Updated:
அசாமில் ஊடுருவியவர்களை பாதுகாக்க சட்டம் கொண்டுவர காங்கிரஸ் திட்டம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம், அம்பேத்கர் அரசியலமைப்பை காங்கிரஸ் சேதப்படுத்தியது என்றும் கூறினார்
அசாம் மாநிலத்திற்குள் ஊடுருவியவர்களை பாதுகாக்கும் சட்டத்தை இயற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொண்டார். திப்ரூகரில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்ற பிரதமர் மோடி, தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்ததுடன், செல்பியும் எடுத்துக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, அசாமில் உள்ள பெரும்பான்மை மக்களை சிறுபான்மையினராக மாற்றி, ஊடுருவல்காரர்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதே காங்கிரஸின் திட்டம் என்றார்.
#WATCH | Dhemaji, Assam: Prime Minister Narendra Modi says, “…Congress wants to settle foreigners in Assam and make the native sons and daughters of this land a minority…The BJP-NDA government will not allow the land of our farmers, tribals, and our forests to be under the… pic.twitter.com/fAgV0QF5V9
— ANI (@ANI) April 1, 2026
அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை காங்கிரஸ் துண்டாடியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
“அசாமில் வெளிநாட்டவர்களை குடியேற்ற காங்கிரஸ் திட்டம்..” பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டு!


