அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம், எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு குறித்த புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் அனைத்து இரவு நேர நிகழ்ச்சிகளையும், இசை நிகழ்ச்சிகளையும் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து மின்சாரம் பெறாமல் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குளிரூட்டிகள் அணைக்கப்பட வேண்டும்
இந்த வழிகாட்டுதல்களின்படி, அனைத்து அரசு மற்றும் சட்டபூர்வ நிறுவனங்களிலும் உள்ள குளிரூட்டிகள் அனைத்தும் பிற்பகல் 3 மணிக்கு அணைக்கப்பட வேண்டும்.

தனியார் துறையும் இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வணிக விளம்பரத்திற்காக பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள ஒளிரும் விளம்பரப் பலகைகள் மற்றும் திரைகள் இரவு 8 மணிக்கு மேல் அணைக்கப்பட வேண்டும்.
தெருவிளக்குகளை அணைக்க நடவடிக்கை
மேலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தெருவிளக்குகளை அணைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள் பொருத்தமான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் அனைத்து அமைச்சகச் செயலாளர்கள், அனைத்து மாகாணத் தலைமைச் செயலாளர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அனைத்து சட்டபூர்வ அமைப்புகளின் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

