Last Updated:
டெல்லி உயர்நீதிமன்றம், சட்டப்பேரவை, பல முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குச் சமீப காலமாக தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.
நாடு முழுவதும் 1,000க்கும் அதிகமான போலி வெடிகுண்டு மிரட்டல்களை மெயில் அனுப்பி, அதிகாரிகளை அலறவிட்ட பெங்களூரு நபரை, டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். உட்கார்ந்த இடத்தில் இருந்தே, டெல்லி உயர்நீதிமன்றம் வரை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியவர் மீது பாய்ந்த நடவடிக்கையின் பின்னணி என்ன?
டெல்லி உயர்நீதிமன்றம், சட்டப்பேரவை, பல முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குச் சமீப காலமாக தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. பதறி அடித்துக் கொண்டு தேடுதலில் ஈடுபடும் பாம் ஸ்குவாட் டீமிற்கு, கடைசியாக இது புரளி என தெரியவரும். இப்படி இமெயில் மூலம் வரும் அடுத்தடுத்த வெடிகுண்டு மிரட்டல்களால் பெரிதும் அவதிக்குள்ளான அதிகாரிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்த மர்ம நபரைப் பிடிக்க தேடுதலில் இறங்கினர்.
சம்பந்தப்பட்ட இமெயில் ஐடியை ட்ராக் செய்து தேடியதில் கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்துவந்த 47 வயதான ஸ்ரீனிவாஸ் லூயிஸ் என்பவர் டெல்லி போலீசாரிடம் சிக்கினார். உள்ளூர் போலீசாரின் உதவியுடன் ஸ்ரீனிவாஸின் வீட்டை சுற்றி வளைத்து அவரை கைது செய்த டெல்லி போலீசார், பலத்த பாதுகாப்புடன் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக அவரிடம் விசாரித்துள்ளனர். மேலும் அவரது லேப்டாப்பையும் சோதனைக்கு உட்படுத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
Delhi Police arrests Mysuru man Srinivas Louis, for sending over 1,100 hoax bomb threats to schools, govt offices.
Louis was apprehended from his rented accommodation in Mysuru during a joint operation by Delhi Police and local police teams. pic.twitter.com/RH4vKcAXzy
— FOX-BET (@PratyaksaA) March 30, 2026
முதுகலைப் பட்டதாரியான ஸ்ரீனிவாஸ், பெங்களூருவைச் சேர்ந்தவர். வேலையின்றி சுற்றித்திரிந்தவர், ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். பலமுறை முயன்றும் வேலை கிடைக்காத விரக்தியில் இருந்தவர், அரசு ஊழியர்களை திட்டமிட்டுப் பழிவாங்கவே வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்து அச்சுறுத்தி வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. மெயில் மற்றும் பிற தகவல் தொடர்பு தளங்கள் வழியாக நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்துள்ளார். இவரால் அரசுக்கு ஏராளமான நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.
இ-மெயிலில் 1,000க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்கள்… அதிகாரிகளை அலறவிட்ட பெங்களூரு நபர் கைது… பின்னணி என்ன…?


