ஒருங்கிணைந்த ஆந்திரத்திலிருந்து பிரிந்து நாட்டின் 29-ஆவது மாநிலமாக தெலங்கானா கடந்த 2014-ஆம் ஆண்டு, ஜூன் 2-ஆம் தேதி உருவானது. அந்த ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி இயற்றப்பட்ட ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, தெலங்கானா மற்றும் ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களும் 10 ஆண்டுகளுக்கு மிகாமல் ஹைதராபாதை பொதுத் தலைநகராக கொண்டு செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டது. அதன்படி, வரும் ஜூன் 2-ஆம் தேதிமுதல், ஹைதராபாத் தெலங்கானாவுக்கு மட்டுமே தலைநகா் ஆகும்.

