மத்திய கிழக்கு போர் நிலைமையை தணிக்கும் நோக்கில் நடைபெறவுள்ள உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னிட்டு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தைகள், தற்போது இரண்டாவது மாதத்திற்குள் நுழைந்துள்ள போரால் பல நாடுகளின் எரிசக்தி பாதுகாப்புக்கும் எல்லைப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில் நடைபெறுகின்றன.
போர்நிறுத்த திட்டம்
இதன்போது, பாகிஸ்தான் முக்கிய இடைத்தரகராக உருவெடுத்துள்ளது. அமெரிக்கா முன்மொழிந்த 15 அம்சங்களைக் கொண்ட போர்நிறுத்த திட்டத்தையும் ஈரானிடம் கொண்டு சேர்த்துள்ளது.

எவ்வாறாயினும், பாகிஸ்தானின் பாதுகாப்பு ஆய்வாளர், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முகமது சயீத், இந்த பேச்சுவார்த்தைகள் உடனடி தீர்வை அளிக்கும் வாய்ப்பு குறைவு என தெரிவித்துள்ளார்.
உயர்மட்ட பேச்சுவார்த்தை
எனினும், சவுதி அரேபியா, ஈரானுக்கு சில நிபந்தனைகளை முன்வைத்து, அவை ஏற்றுக்கொள்ளப்பட்டால் மேற்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் வகையில் மத்தியஸ்தத்தில் அதிக ஈடுபாடு காட்டக்கூடும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இதனை முன்னிட்டு, இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சக வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த பேச்சுவார்த்தைகள், பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

