Last Updated:
நேபாளத்தில் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற நிலையில், நேபாளின் கடந்த வருட இளைஞர் புரட்சிக்கு காரணம் என்று கூறி முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது.
நேபாளத்தில் கடந்த ஆண்டில் இளைஞர்கள் நடத்திய புரட்சிக்கு காரணமாக இருந்ததாக முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின்போது, 19 இளைஞர்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற நிலையில், இந்த சம்பவத்துக்கு காரணம் என்று கூறி முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார்.
VIDEO | Nepal: Party meeting is underway at CPN-UML headquarters in Chyasal, Lalitpur after KP Sharma Oli’s arrest.
Nepal’s Former Prime Minister K P Sharma Oli was arrested on Saturday, a day after the newly formed government of Balendra Shah implemented the probe commission… pic.twitter.com/gHJcsZAt6u— Press Trust of India (@PTI_News) March 28, 2026
குண்டு பகுதியில் உள்ள இல்லத்திலிருந்து சர்மா ஒலியை காவல் துறையினர் இன்று காலை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவருடன் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புதிய உள்துறை அமைச்சர் சுடான் குருங், முன்னாள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும், இது நீதிக்கான தொடக்கம்தான் என்றும் தெரிவித்துள்ளார். யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை என்றும், நாடு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பதாகவும் சுடான் குருங் தெரிவித்தார். எனினும், தனது சட்டப் போராட்டம் தொடரும் என்று சர்மா ஒலி தெரிவித்துள்ளார்.


