கோலாலம்பூர் | மார்ச் 28, 2026
மலேசியாவின் சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் பல பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வானிலையை சபா (Sabah): சபாவின் உள்பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக: சிபித்தாங் (Sipitang), தெனோம் (Tenom), பியூஃபோர்ட் (Beaufort), நபாவான் (Nabawan), தம்புனான் (Tambunan), மற்றும் சரவாக் (Sarawak): சரவாக் மாநிலத்தில் கீழ்க்கண்ட இடங்களில் மழை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது:
மேலும் சிபு (செலங்காவு – Selangau), காப்பிட் (சோங் – Song), பிந்துலு (தாதாவ் – Tatau), மிரி (தெலாங் உசான் – Telang Usan), லிம்பாங் (Limbang) ஆகிய இடங்களும் இந்த வானிலையை எதிர்கொள்ளும் என அது தெரிவித்துள்ளது.
கனமழை மற்றும் பலத்த காற்றினால் திடீர் வெள்ளம் அல்லது மரங்கள் முறிந்து விழும் அபாயம் இருப்பதால், இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக, இடி மின்னல் ஏற்படும் போது திறந்தவெளிப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




