Last Updated:
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் டிரம்ப் மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வர நிபந்தனைகளை உருவாக்கி வருவதாக ஈரான் ராணுவம் கூறிய நிலையில், அந்நாட்டு தலைநகர் டெஹ்ரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்தும் ஓய்ந்தபாடில்லை. அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக இரண்டு தரப்பிலும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர நிபந்தனைகளை உருவாக்கி வருவதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது. மேலும், போர்க்களத்தை தீர்மானிக்கும் வலிமை தங்களிடம் இருப்பதாகவும், ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டது. இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதலை தீவிரப்படுத்தின.
ஈரான்
மத்திய ஈரானில் உள்ள கோன்டாப் மற்றும் யாஸ் மாகாணத்தில் அணு உற்பத்தி தொடர்பான ஆலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் டிரம்ப் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, சவுதி அரேபியாவில் அமெரிக்கா பயன்படுத்தி வரும் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில், 12 அமெரிக்கர்கள் படுகாயம் அடைந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போரை முடிக்கும் முனைப்பில் ஈரான்… தொடர் தாக்குதலில் அமெரிக்கா, இஸ்ரேல்… என்ன நடக்கிறது?


