மக்கள் வரிப்பணத்தில் இடம்பெறும் அபிவிருத்திக் குழு கூட்டங்களை மக்கள் அறிய வேண்டும் எனவும் ஊடகங்களை அடக்க நினைப்பது மோசமான செயல் எனவும் வலி கிழக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (27-03-2026) மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.
மோசமான அடக்குமுறை
இதில் ஊடகங்கள் தொடர்பாக அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்த கருத்தைச் சுட்டிக்காட்டியே தவிசாளர் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்கள் மக்கள் வரிப்பணத்தில் இடம்பெறுகின்றன.

அதில் இடம்பெறுகின்ற விடயங்களை மக்கள் அறிவதற்கு ஊடகங்களின் உதவி தேவை.
மக்கள் தாம் வாக்களித்த பிரதிநிதிகள் தமக்காக என்ன பேசுகிறார்கள் என்பது தொடர்பில் அறிவது அவர்களின் உரிமை.
அதை ஊடகங்கள் அவர்களுக்குச் சரியான முறையில் வழங்க வேண்டும்.
அதை விடுத்து ஊடகங்களைக் காணொளி எடுப்பதற்குக் கட்டுப்படுத்தும் செயற்பாடு, மோசமான ஒரு அடக்குமுறையின் செயற்பாடு” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

