ஈரானின் அணுசக்தி வசதிகள் மீது நடைபெறும் தாக்குதல்கள் பெரும் கதிரியக்க வெளியீட்டுக்கு (radiological release) வழிவகுக்கும் என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) பொது இயக்குநர் ரபேல் மரியானோ கிரோஸி தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.
குறிப்பாக, செயல்பாட்டில் உள்ள புஷெர் அணுமின் நிலையம் (Bushehr Nuclear Power Plant) மீது நேரடித் தாக்குதல் அல்லது மின்சாரம் துண்டிக்கப்பட்டால், உலைக் கரு உருகல் ஏற்பட்டு, வளிமண்டலத்தில் கதிரியக்கப் பொருட்கள் பரவும் அபாயம் மிக அதிகம் என அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டபடி,
புஷெர் அணுமின் நிலையம்
“புஷெர் அணுமின் நிலையத்தின் வளாகத்திற்குள் ஒரு ஏவுகணை (projectile) விழுந்ததாகவும், ஆனால் அணு உலைக்கு நேரடி சேதம் ஏற்படவில்லை என்றும் IAEA உறுதிப்படுத்தியுள்ளது.

ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், கதிர்வீச்சு அளவு இயல்பு நிலையிலேயே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கிரோஸி தனது அறிக்கையில், “இயங்கும் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அது மிகவும், மிகவும் தீவிரமானது. இது அணுப் பாதுகாப்பில் மிகச் சிவப்பு கோடு (reddest line) ஆகும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
சூழல் மிகவும் கவலைக்குரியது
மேலும், “அணுசக்தி வசதிகள் மீதான ஆயுதத் தாக்குதல்கள் ஒருபோதும் நடைபெறக் கூடாது. இது எல்லைக்குள் மட்டுமின்றி, எல்லைக்கு அப்பாலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று IAEA-வின் பொதுச் சபை தீர்மானங்களை நினைவூட்டியுள்ளார்.

இதுவரை நடான்ஸ், புஷெர் உள்ளிட்ட முக்கிய அணுசக்தி தளங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படவில்லை.
அண்டை நாடுகளில் கதிர்வீச்சு அளவு சாதாரண நிலையிலேயே உள்ளது.
ஆனால், சூழல் மிகவும் கவலைக்குரியது என்று கிரோஸி கூறியுள்ளார்.
பெரும் கதிரியக்க வெளியீடு ஏற்பட்டால், பெரு நகரங்களுக்கு சமமான அல்லது அதைவிட பெரிய பகுதிகளை வெளியேற்ற வேண்டிய நிலை, உணவு மற்றும் நீர் கட்டுப்பாடுகள், ஸ்திர ஐயோடின் உட்கொள்ளல் போன்ற நடவடிக்கைகள் தேவைப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

