அதைத் தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “நடந்து வரும் ஈரான்-அமெரிக்கப் போருக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ள வளைகுடாவின் முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் ஜலசந்தியை, இந்தியா, பாகிஸ்தான், ஈராக், சீனா மற்றும் ரஷ்யா போன்ற ‘நட்பு நாடுகள்’ பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.” எனக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், கடுமையான போருக்கு மத்தியில் இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டுக் கூட்டத்தில் பேசிய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் சின்ஹா, “இந்தியக் கொடியுடன் கூடிய இரண்டு எல்பிஜி கப்பல்களான பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் ஆகியவை ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து இந்தியக் கப்பல்களும் மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

