ஜோகூர் பாரு | மார்ச் 26, 2026:
ஜோகூர் பாரு, ஊத்தான் பண்டார் (Hutan Bandar MBJB) பூங்காவில் சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற புதிய நீர் விளையாட்டு குளம் (Water Recreation Pool), சமூக விரோதிகளின் அநாகரிகச் செயல்களால் (Vandalism) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு மாநகராட்சி (MBJB) தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறுப்பற்ற சில நபர்கள் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாலும், தூய்மையைக் குலைத்ததாலும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அநாகரிகச் செயல்கள் மற்ற பார்வையாளர்களுக்குப் பெரும் இடையூறையும், பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கியுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சேதமடைந்த வசதிகளைச் சீரமைக்கவும் இந்தப் பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது.




