ஈரான் போர் நிறுத்தத்தை முன்னிறுத்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று 15 அமைதி பரிந்துரைகளை முன்மொழிந்திருந்தார்.
போர் நிறுத்தத்திற்கு இதுவரை கொஞ்சம் முரண்டு பிடித்து வந்த ஈரான் தற்போது கொஞ்சம் இறங்கி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் “The Wall Street Journal’ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஈரான் முன்வைக்கும் 5 நிபந்தனைகள்…
> ஈரான், அமெரிக்கா இடையிலான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
> அமெரிக்கா எதிர்காலத்தில் ஈரான் மீது எந்த ராணுவ தாக்குதலையும் நடத்தாது என்கிற உறுதி வேண்டும்.
> இப்போதைய தாக்குதலில் ஈரானில் ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் பாதிப்புகளுக்கு அமெரிக்கா நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
> ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டுப்பாடு வேண்டும்.
> ஈரான் ஏவுகணைத் திட்டம் குறித்து அமெரிக்கா எந்தப் பேச்சுவார்த்தையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது”.
இவற்றுக்கு ஒப்புக்கொண்டாலே அடுத்த பேச்சுவார்த்தை என்று ஈரான் தெரிவித்துள்ளதாம்.
இதற்கு அமெரிக்காவின் பதில் என்னவாக இருக்கப் போகிறதோ?
