Last Updated:
பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கொடுக்க ஏதுவாக தற்போது இருக்கும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816 ஆக அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கொடுக்க ஏதுவாக தற்போது இருக்கும்
மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816 ஆக அதிகரிப்பதற்காக சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 3-ல் ஒரு பங்கு இடஒதுக்கீடு
வழங்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது.
அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகிய நடைமுறைகளோடு இணைக்காமல், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களவை இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு கொடுக்க ஏதுவாக தற்போது இருக்கும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816 ஆக அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இரண்டு புதிய மசோதாக்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா இந்த இரண்டு மசோதாக்களுக்கும் அரசியல் கட்சிகளிடம் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த புதிய திட்டத்தின்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் விகிதாசாரம் மாறாமல், ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் 39 ஆக உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மகளிருக்கு 3-ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாட்டில் எத்தனை மக்களவை தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு?


