ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு மலேசியா தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
மலேசிய வெளியுறவு அமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனையின் போது, ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான உரிமையை மலேசியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில், ஹார்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பதற்றங்கள் மற்றும் தற்போதைய போரை நிறுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய விரிவான இராஜதந்திர முயற்சிகள் குறித்துப் பேசப்பட்டுள்ளது.
பிராந்திய நாடு
அத்தோடு, தாக்குதல்களுக்காகப் பிராந்திய நாடுகளின் நிலப்பரப்புகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை ஈரான் வலியுறுத்தியுள்ளது.

இதனுடன், வளைகுடா பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த மலேசியத் தரப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், இப்போரில் கொல்லப்பட்ட ஈரானியப் பொதுமக்களுக்காக மலேசிய வெளியுறவு அமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலையும் இதன்போது தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

