Last Updated:
மோசமான வானிலை நிலவி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
லடாக்கில் ஜோஜிலா (Zojila) பகுதியில் பனிப்பொழிவால் நான்கு நாட்களாக மூடப்பட்டிருந்த சாலையில் மீண்டும் பகுதியளவில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
யூனியன் பிரதேசமான லடாக்கின் ஜோஜிலா பகுதியில் கடந்த வாரம் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன்காரணமாக ஸ்ரீநகர் மற்றும் லடாக்கின் லே நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பல அடி உயரத்திற்கு பனிக்கட்டிகள் சூழ்ந்ததால் நான்கு நாட்களாக போக்குவரத்து முடங்கியது.
#WATCH | Heavy snowfall has been reported at Zoji La Pass and higher reaches today, impacting traffic movement towards Sonamarg. Authorities are closely monitoring the situation to ensure the safety of travellers. Teams of Ladakh Police and the Border Roads Organisation for their… pic.twitter.com/G6KLKTYmv4
— ANI (@ANI) March 23, 2026
இந்நிலையில், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எல்லை பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, ஸ்ரீநகர் – லே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.
தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


