Last Updated:
சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது அவரது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள முக்கிய ஆல்ரவுண்டர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் வரும் 28 ஆம் தேதி சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கவுள்ளது. போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்பே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு அடுத்தடுத்து பலத்த பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன
கே.கே.ஆர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, தசைநார் காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதிலிருந்தும் விலகியுள்ளார். சமீபத்தில் நடந்த டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது அவரது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
இதற்காக பிப்ரவரி மாதம் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பு மற்றும் பயிற்சியில் உள்ளார். அணியின் முக்கிய அங்கமாக இருந்த ராணாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என தலைமை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கவலை தெரிவித்துள்ளார்.
இதேபோன்று இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனாவும் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், அவர் விளையாடுவதிலும் சிக்கல் நீடிக்கிறது. இலங்கை கிரிக்கெட் வாரியம் அவருக்கு இன்னும் தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை. அவர் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியும்.
Mar 20, 2026 10:29 PM IST


