Last Updated:
சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்திய ரூபாய் மதிப்பு 93 ஆக சரிந்துள்ளது
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 93 ரூபாயாக சரிந்துள்ளது இதுவரை இந்த விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்
இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில், இன்றைய வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகராக 93.08 முதல் 93.28 வரை சரிந்தது.
கடந்த சில வாரங்களாகவே சரிவைச் சந்தித்து வந்த ரூபாய், இன்று ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தத் திடீர் வீழ்ச்சிக்கு சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழலே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதித்துள்ளன.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85% இறக்குமதியையே நம்பியுள்ளது. தற்போது நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 115 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இது இந்தியாவின் இறக்குமதிச் செலவை பன்மடங்கு அதிகரிப்பதோடு, நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையையும் அதிகப்படுத்துகிறது. இதன் நேரடி விளைவாக ரூபாய் மதிப்பு பலவீனமடைகிறது. மேலும், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து தங்கள் முதலீடுகளை அதிகளவில் வெளியேற்றி வருகின்றனர்.
மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 8 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளன. அமெரிக்க டாலரின் வலிமை உலகளவில் அதிகரித்து வருவதும், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதும் ரூபாயின் மதிப்பை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாய்.. அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 93 ரூபாயாக ஆக சரிந்தது..


