கத்தார் மற்றும் வளைகுடா நட்பு நாடுகளுடன் பிரித்தானியா என்றும் உறுதியாக நிற்கும் எனப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
கத்தாரின் எரிசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் (Sheikh Tamim bin Hamad Al Thani) மேற்கொண்ட அவசரத் தொலைபேசி உரையாடலின் போதே அவர் இந்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
உள்கட்டமைப்புகள்
முக்கிய உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் இத்தகைய பொறுப்பற்ற தாக்குதல்கள், பிராந்தியத்தை மேலும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளும் அபாயத்தைக் கொண்டுள்ளதாகப் பிரதமர் எச்சரித்துள்ளார்.

இத்தகைய மோதல்கள் ஐக்கிய இராச்சியம் உட்பட உலகளவில் கடுமையான பொருளாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் ஈரானின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில் பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தனது நாடு தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

