Last Updated:
ஆர்சிபி அணி தொடக்க காலத்தில் வாங்கப்பட்டதை விடவும் அதன் மதிப்பு 18 மடங்கு உயர்ந்துள்ளது.
ஐபிஎல் சாம்பியன் அணியான ஆர்.சி.பி.யை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்கள் விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது சாம்பியன் அணியாக இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையாளர்கள் விரைவில் மாற உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவியிருந்தன.
குறிப்பாக ஆர்சிபி அணியை, இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட கிளப் அணியான் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்களான கிளேசர் குடும்பத்தினர் ஆர்சிபியை வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.
ஆர்சிபி அணி தொடக்க காலத்தில் வாங்கப்பட்டதை விடவும் அதன் மதிப்பு 18 மடங்கு உயர்ந்துள்ளது. விராட் கோலி போன்ற நட்சத்திர வீரரால் உருவான ரசிகர் பட்டாளம் மற்றும் சமூக வலைதளங்களில் உள்ள செல்வாக்குதான் இந்த அதீத விலைக்கு முக்கியக் காரணம்.
ஆர்சிபி-யை ரூ. 16 ஆயிரம் கோடி கொடுத்து வாங்குவதற்கு கிளேசர் குடும்பத்தினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்தி லாபம் ஈட்டுவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்பதால் கிளேசர்கள் பின்வாங்கியுள்ளனர். இந்த தகவல்கள் விளையாட்டுத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையே ஆர்சிபி அணியை வாங்குவதற்கு சவூதி அரேபியாவை சேர்ந்த பொது முதலீட்டு நிதியமான PIF ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.


