Last Updated:
புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இழுபறி நீடிக்க, இரு கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்தன.
புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில், திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்யத் தொடங்கினர்.
மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்களில் யாரும் மனுத்தாக்கல் செய்யாத சூழலில், அமாவாசை தினமான புதன் அன்று வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வம் காட்டினர்.
தமிழ்நாட்டில் பெரும் இழுபறி சலசலப்புகளைக் கடந்து திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது.
அதேசமயம், புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் இடையே இன்னும் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், அங்கு திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் நீடித்துவருகிறது. இந்நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை இன்று புதுச்சேரியில் தாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல, காங்கிரஸ் சார்பில் மணவெளி தொகுதியில் முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் வேட்புமனு தாக்கல் செய்தார். ஜோஸ் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நெல்லித் தோப்பு தொகுதியில் அமைச்சர் ஜான் குமாரின் மனைவி லதாவும், நாகூர் தொகுதியில் ஜான் குமாரின் மகன் ரீகன் ஜான் குமாரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Puducherry (Pondicherry)


