நவகிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான், வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி மீன ராசிக்குள் நுழைந்து ஏப்ரல் 18 ஆம் திகதி உதயமாவார்.
அஸ்தமன நிலையில் இருந்து செவ்வாய் உதயமாவதால் அதன் பலம் அதிகரித்து சில ராசிக்காரர்களுக்கு யோகமான பலன்கள் கிடைக்கவுள்ளன.
ஜாதகத்தில் செவ்வாய் வலுப்பெறுவதன் மூலம் புதிய வீடு, வாகன சேர்க்கை மற்றும் உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு பயனடைப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் காணலாம்.
| மிதுனம் |
- மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.
- இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல பெயர்களைப் பெறுவார்கள்.
- அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
- வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- தொழிலதிபர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள்.
|
| மீனம் |
- மீன ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.
- இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும் ஆற்றலும் அதிகரிக்கும்.
- தொழில் மற்றும் வணிகம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.
- தைரியமும், வீரமும் இருமடங்கு அதிகரிக்கும்.
- இதுவரை சந்தித்து வந்த உடல் சோர்வு நீங்கும்.
- இனிமேல் உற்சாகமாக செயல்படுவீர்கள்.
|
| தனுசு |
- தனுசு ராசியின் நான்காவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.
- இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள்.
- நல்ல பொருள் வசதிகளைப் பெறுவார்கள்.
- தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
- புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.
- வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும்.
- தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து அவரது உடல்நலம் மேம்படும்.
|
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!
|
Read More