Last Updated:
அபிஷேக் சர்மா, டி20 உலகக் கோப்பையின் போது தான் சந்தித்த சவால்கள் மற்றும் கவுதம் கம்பீர், சூர்யகுமார் யாதவ் அளித்த ஆலோசனைகள் குறித்து சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கத்தில் இளம் வீரர் அபிஷேக் சர்மா பெரும் பின்னடைவைச் சந்தித்தார். குரூப் சுற்றில் தொடர்ந்து மூன்று முறை ‘டக்-அவுட்’ ஆகி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
ஒரு கட்டத்தில் இரண்டாவது முறையாக ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறிய போது, தான் மனரீதியாக மிகவும் உடைந்துபோகும் நிலையில் இருந்ததாக அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அபிஷேக் சர்மா ரன் எடுக்க முடியாமல் திணறிய போது, அவர் மீது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதைக் கவனித்த தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அவரிடம் வந்து நேரடியான ஆலோசனையை வழங்கியுள்ளனர். “உன் போனை எடு, இப்போதே சமூக வலைதளங்களை அன்-இன்ஸ்டால் செய்” என்று அவர்கள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வருவது இயல்பு தான் என்றும், அதைத் தவிர்க்க போனை தள்ளி வைப்பதே சிறந்தது என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Mar 15, 2026 11:03 PM IST


