யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கான நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இந்த விமான நிலைய விஸ்தரிப்பிற்காக 1985 ஆம் ஆண்டு பொதுமக்களின் காணிகள் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அக்காலப்பகுதியில் நிலவிய யுத்தம் காரணமாக மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறியதாகவும் ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தையிட்டி விகாரை மக்களின் சொந்தக் காணிகளில் கட்டப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
தையிட்டி விகாரையை உடைக்க வேண்டிய தேவையில்லை. எனினும் இதற்கு பதிலாக வேறு காணிகளை வழங்கினால் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் மீதி காணிகளை விடுவிக்க வேண்டும் எனவும் பொது மக்களும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தப்பிரச்சினையை நெடுங்காலத்திற்கு நீடிக்காமல் வெகுவிரைவில் தீர்க்க வேண்டும் என்பதே எனது பரிந்துரை.” என தெரிவித்துள்ளார்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க…..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

