Last Updated:
கூட்டு பாதுகாப்பு ஒத்திகையை வடகொரிய கிம் ஜாங் உன், படையெடுப்படுப்பாக கருதுவதால் பதிலடியாக 10 ஏவுகணைகளை வீசி எச்சரித்துள்ளதாக கருதப்படுகிறது.
தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு அருகில் வடகொரியா அணு ஆயுதங்களை சுமக்கவல்ல ஏவுகணைகளை வீசி சோதனை செய்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் வடகொரியா அவ்வப்போது இரு நாடுகளின் கடல் பகுதி அருகே ஆயுத சோதனை மேற்கொள்வதும் அதற்கு இரு நாடுகளும் எதிர்ப்பு தெரிவிப்பதும் வழக்கம். இந்நிலையில், வழக்கமாக 2 அல்லது 3 ஏவுகணைகளை ஏவி பதற்றத்தை ஏற்படுத்தும் வடகொரியா, 10 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளது. தலைநகர் பியாங்யாங்கின் அருகில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் 350 கிலோமீட்டர் தூரம் கடந்து கிழக்குக் கடலில் விழுந்தன. இது தென்கொரியா கடல் எல்லை மட்டுமின்றி, ஜப்பான் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு மிக அருகிலும் சென்று வெடித்ததால் இரு நாடுகளும் கொதிப்படைந்துள்ளன.
வடகொரிய அதிபர்
இதற்கிடையே Freedom Shield என்ற கூட்டுப் பாதுகாப்பு ஒத்திகையை தென்கொரியாவும், அமெரிக்காவும் 11வது நாளாக தொடர்ந்தன. இந்த கூட்டு பாதுகாப்பு ஒத்திகையை வடகொரிய கிம் ஜாங் உன், படையெடுப்பாக கருதுவதால் பதிலடியாக 10 ஏவுகணைகளை வீசி எச்சரித்துள்ளதாக கருதப்படுகிறது. இந்த இரு நடவடிக்கைகளும் கிழக்கு ஆசியப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
அணு ஆயுதங்களை சுமக்கும் ஏவுகணைகளை வீசி சோதனை… வடகொரியாவால் ஜப்பான், தென் கொரியா பதற்றம்!


