டெல்லியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
டெல்லி விவேக் விஹார் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துமனையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் குழந்தைகளை அவசரம் அவசரமாக வெளியேற்றினர்.
Also Read :
குஜராத் மாலின் கேமிங் சென்டரில் பயங்கர தீ விபத்து : 27 பேர் உயிரிழந்த சோகம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்ட 12 குழந்தைகளில் 7 பச்சிளங் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
காயமடைந்த குழந்தைகள் மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
