இனி பதிலடி நடவடிக்கைகளுக்கான காலம் முடிந்துவிட்டது என்றும், முழுமையான போருக்கு தயாராக இருப்பதாகவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC)
அறிவித்துள்ளது.
தனது இருப்பே ஆபத்தில் இருப்பதாக ஈரான் உணர்கிறது என்றும், இனி சிறிய அளவிலான பதில்-தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இடமில்லை என்றும் IRGC தெரிவித்துள்ளது.
உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து கடல்வழி பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி தற்போது செல்ல முடியாத பகுதியாக மாறியுள்ளதாகவும், ஈரானின் அனுமதி இல்லாமல் ஒரு லீற்றர் எண்ணெய் கூட அப்பாதையில் செல்லாது என்றும் IRGC தெரிவித்துள்ளது.
தாக்கப்பட்ட கப்பல்கள்
சமீபத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் மூன்று கப்பல்கள் குறித்து IRGC விளக்கமளித்தபோது, அவை வேறு நாட்டின் கொடியின் கீழ் பயணித்திருந்தாலும், உண்மையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்காக வேலை செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், ஈரானிய ஆயுதப்படைகளின் கூட்டுப் போர் கட்டளையின் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபாகாரி, “ சந்தேகத்துக்குரிய ஒவ்வொரு கப்பலையும் நாங்கள் சட்டப்பூர்வமான இலக்காகக் கருதுகிறோம். ஒரு பீப்பாய் எரிபொருளை $200க்கு வாங்கத் தயாராக இருங்கள்.” என்று எச்சரித்துள்ளார்.
போரின் முடிவு
அத்தோடு, ட்ரம்பிற்கு மற்றும் இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறைக்கு எச்சரிக்கையொன்றை விடுத்த சோல்ஃபாகாரி, “நீங்கள் போரை தொடங்குங்கள், அது எப்படி முடிகிறது என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரானின் ஏவுகணை திறன்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அதனை நிராகரித்த ஈரானிய நாடாளுமன்ற தலைவர், ஈரான் விரும்பும் எந்த இடத்தையும் தாக்கும் திறன் நாட்டிற்கு உள்ளது என்று எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

