Last Updated:
இந்த வரலாற்று சிறப்புமிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய திட்டம், அமெரிக்காவை மீண்டும் எரிசக்தி துறையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாற்றும் என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, டெக்சாஸ் மாகாணத்தின் பிரவுன்ஸ்வில் பகுதியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படுவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைந்து இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய முதலீட்டு ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் நாட்டின் எரிசக்தி தேவையில் தன்னிறைவு பெறுவதையும், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சுத்திகரிப்பு நிலையத்திற்கு ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட் ரிஃபைனிங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது உலகின் மிகவும் தூய்மையான சுத்திகரிப்பு நிலையமாக செயல்படும் என்று ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தெற்கு டெக்சாஸ் பகுதியில் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, பல பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
Donald J. Trump Truth Social 03.10.26 04:17 PM EST
America is returning to REAL ENERGY DOMINANCE! Today I am proud to announce that America First Refining is opening the FIRST new U.S. Oil Refinery in 50 YEARS in Brownsville, Texas. THIS IS A HISTORIC $300 BILLION DOLLAR DEAL —…
— Commentary Donald J. Trump Posts From Truth Social (@TrumpDailyPosts) March 10, 2026
இந்த வரலாற்று சிறப்புமிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய திட்டம், அமெரிக்காவை மீண்டும் எரிசக்தி துறையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாற்றும் என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்துவதுடன், உலகளாவிய ஏற்றுமதி சந்தையிலும் அமெரிக்காவின் பிடியை வலுப்படுத்தும். போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தெற்கு டெக்சாஸ் பிராந்தியத்தில் ஒரு புதிய தொழில்புரட்சியை இந்த சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தும் என்றும், இது அமெரிக்க எரிசக்தி மேலாதிக்கத்தின் அடையாளமாக திகழும் என்றும் அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
50 ஆண்டுகளில் முதல் அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு.. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்த அதிபர் ட்ரம்ப்..!


