Last Updated:
டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 96 ரன்களில் வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய அணி. இதன் மூலம் 3வது முறை சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. மேலும், நடப்பு சாம்பியனாக இருக்கும் அணி மீண்டும் கோப்பை வெல்வது இதுவே முதன்முறை. அதேபோல சொந்த நாட்டில் கோப்பை வெல்லும் முதல் அணி என 3 வரலாற்று சாதனைகளை படைத்தது.
ஆண்கள் டி20 உலக கோப்பை, பெண்கள் உலக கோப்பை, அன்டர் 19 பெண்கள் டி20 உலக கோப்பை, அன்டர் 19 ஆண்கள் உலக கோப்பை, சாம்பியன் டிராபி ஆகிய கோப்பைகளை தற்போது இந்திய அணி கைவசம் வைத்திருக்கிறது.
இந்நிலையில் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், பிற பணியாளர்களுக்கு ரூ.131 கோடி பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியை பாராட்டி பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் வெளியிட்ட அறிவிப்பில், “டி20 உலக கோப்பையை வென்றிருப்பது ஒட்டுமொத்த நாட்டுக்குமான பெருமை. நடப்பு சாம்பியன் அணி, தனது சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் பெற்றிருப்பது இதனை கூடுதல் சிறப்பாக்கியுள்ளது.
அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வழிகாட்டுதலில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Mar 10, 2026 12:38 PM IST


